லஞ்சம் வாங்கிய மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கைது
1061 views
Subscribe தமிழ்நாடு videosதிருவண்ணாமலை அடுத்த கீழ் பாலானந்தல் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் இவரது மனைவி பரிமளா.குடும்ப பிரச்சினை காரணமாக பரிமளா தன் கணவரோடு சண்டை போட்டுக் கொண்டு அவரது அண்ணன் வீட்டுக்கு சென்று விடுகிறார்.இது தொடர்பாக பரிமளா வெற்றிவேலின் மீது திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில் வெற்றிவேலிடம் விசாரணை முடித்து அவரிடம் எழுத்து மூலமாக அறிக்கை பெற்று காவல் நிலைய செலவுக்காக 3000 ரூபாய் லஞ்சம் கேட்ட திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பரமேஸ்வரி மீது வெற்றிவேல் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார்.இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் காவல் நிலையத்தில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் 3000 ரூபாய் லஞ்சம் பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பரமேஸ்வரியை கைது செய்தனர்.