எங்கப்பா அந்த 4 லட்ச ரூபாய் மின்மாற்றி?பொதுமக்கள் கேள்வி!
1221 views
Subscribe தமிழ்நாடு videosதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று இரவு இடியுடன் கூடிய மிதமான மழை பொழிந்தது அதனையடுத்து மின்சாரம் நகரம் முழுமையும் 9.00 மணியளவில் நிறுத்தபட்டு 11.00 மணியளவில் முழுமையன அளவு மின்சாரம் வழங்கபடாமல் பாதி அளவு மின்சாரம் மட்டுமே வழங்கபட்டது . இதுகுறித்து இரவு 12 மணியளவில் மூவாநல்லூர் துணைமின் நிலையஅலுவலகத்தை தொடர்பு கொண்டபோது தங்களிடம் இருந்து முழுமையான மின்சாரத்தை கொடுக்கிறோம் . உங்கள் பகுதி லயன்மேனை தொடர்பு கொள்ளங்கள் என தொலைபேசியை துண்டித்துவிட்டார் அது தொடர்பாக அந்தந்ந பகுதி லயன்மேனை தொடர்பு கொண்டால் துணைமின் நிலைய அலுவலகத்திலிருந்தே பாதி அளவு மின்சாரம் வருகிறது நாங்கள் என்ன செய்யமுடியும் என்கிற பதிலை தெரிவித்தனர் . கடந்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரையில் மின்பற்றாகுறையை போக்க வழங்கபட்ட கோடி ரூபாய் மதிப்பிலான உயர் திறன் மின் மாற்றி 4 லட்சம் மதிப்பிலான பிரேக்கர்கள் சாதனங்கள் எங்கே என்கிற கேள்வியை பொதுமக்கள் எழுப்புகின்றனர் . பாதி அளவு மின்சாரம் வழங்கபட்டதினால் மன்சாதனங்களில் ஏற்பட்டுள்ள பழுதுக்கு யார் பொருப்பு ஏற்பார்கள் என்கிற கேள்வி பொதுமக்கிடையே எழுந்துள்ளது ? .