ராஜபாளையத்தில் பஞ்ச ஸ்தலத்தில் ஆகாய ஸ்தளமான தேவதானம் திருக்கோவிலில் வைகாசி தேரோட்டம்!
1052 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பஞ்ச ஸ்தலத்தில் ஆகாய ஸ்தளமான தேவதானம் திருக்கோவிலில் வைகாசி தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.இராஜபாளையம் அருகே தேவதானத்தில் உள்ள அருள்மிகு தவம் பெற்ற நாயகி அம்மன் உடனுறை நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி வைகாசி உற்சவம் கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த 8 நாட்களாக சுவாமி அம்பாள் இருவரும் பல்வேறு வாகனங்களில் எழுந்துருளி பொதுமக்களுக்கு காட்சியளித்தனர். ஒன்பதாம் திருநாள் இன்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல் தேரில் பிரியாவிடையுடன் சுவாமியும், இரண்டாவது தேரில் அம்பாலும் எழுந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இதனயடுத்து நாளை பத்தாம் திருநாள் அன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.