30 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு!!
1075 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளத்தை சேர்ந்த பொன்னு பாண்டி மற்றும் பழனி குமார் ஆகிய இருவர் இணைந்து டி என் சி முக்கு ரோடு பகுதியில் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி மறு விற்பனை செய்து வருகின்றனர்.இவர்களது நிலையத்தில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அருகே உள்ள கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்த சந்தானகுமார் என்பவர் பழைய இருசக்கர வாகனம் வாங்கி உள்ளார்.தொடக்கத்தில் இருந்தே அடிக்கடி வாகனம் பழுதாகுவதாக பழனி குமாரிடம் புகார் தெரிவித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் தவணை கட்டிய சந்தான குமார் கடந்த மாதம் தவணை கட்டவில்லை என தெரிகிறது.மாத தவணையை கட்டக்கோரி பழனி குமார் சந்தானகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார் அதற்கு இரு சக்கர வாகனத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால் செலவு அதிகமானதாகவும் தற்போது தவணை கட்ட இயலாது என்று தெரிவித்துள்ளார்.வாகனப் பழுதை தன்னிடமே சரி செய்து கொள்ளலாம் எனவும் உடனடியாக தவணையை கட்ட வேண்டும் எனவும் பழனி குமார் கூறியதாக தெரிகிறது.இந்த நிலையில் பைனான்ஸ் அலுவலகத்தில் ஏற்கனவே பணியாற்றிய மதன்குமார் என்பவரை உடன் அழைத்துக் கொண்ட சந்தனகுமார், நேற்று இரவு குடிபோதையில் பழனி குமார் வீட்டுக்கு சென்றுள்ளார்.அப்போது பழனி குமார் வீட்டின் முன்புறம் இருந்த கண்ணாடி ஜன்னல் உள்ளிட்டவைகளை தாக்கி உடைத்துள்ளார். இதனை தட்டிக் கேட்ட பழனிக்குமார் மற்றும் அவரது மனைவியை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி விட்டு அங்கிருந்து இருவரும் தப்பி சென்று விட்டனர்.இச்சம்பவம் குறித்து நேற்று இரவு ஆலங்குளம் காவல் நிலையத்தில் பழனி குமார் புகார் அளித்துள்ளார்.இந்த நிலையில் அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் பழனிகுமார் அலுவலகத்தில் இருந்த வாகனங்கள் தீ பற்றி எரிந்ததாக தகவல் வந்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அலுவலகத்தில் வெளிப்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25 வாகனங்களும் அலுவலகத்தில் உள்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பத்து வாகனங்கள் என 35 வாகனங்கள் மொத்தமாக எரிந்து சேதமானது. மேலும் அலுவலகத்தில் உள்ளே இருந்த உபயோகப் பொருட்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் ஆவணங்களும் மொத்தமாக தீயில் எரிந்து சேதமானது. இதன் மொத்த மதிப்பு 30 லட்சம் வரை இருக்கும் என உரிமையாளர் பழனிக்குமார் தெரிவித்தார்.இது குறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் சந்தனகுமார் மற்றும் மதன் குமார் ஆகிய இருவர் மீது பழனி குமார் புகார் அளித்துள்ளார்.நள்ளிரவில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 35 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.