சிலம்பம் அகாடமி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சார்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி!
1051 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் அருகே வில்லி பத்திரி கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் வில்லி பத்திரி இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக சிலம்பம் அகாடமி செயல்பட்டு வருகிறது இந்த சிலம்பம் அகாடமியை வில்லிபத்திரி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவர் நிர்வகித்து வருகிறார்.இவர் கடந்த 12 வருடகாலமாக சிலம்பக் கலையை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியராக இருந்து சிலம்பம், மான்கொம்பு, சுருள் போன்ற கலைகளை கற்றுத் தந்து வருகிறார். இவருடைய அகாடமியில் 100க்கும் மேற்பட்டவர்கள் சிலம்பக்கலையை ஆரவமுடன் பயின்று வருகின்றனர்.இவர்கள் வில்லிபத்திரி கிராமத்தை பசுமையாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சொந்த முயற்சியில் மரம் நடுவதற்கு ரோட்டரி கிளப் ஆப் விருதுநகர் கிங்டம் அமைப்பை நாடி மரக்கன்றுகளை கேட்டனர்.அதனை முன்னிட்டு ரோட்டரி கிளப் ஆப் விருதுநகர் கிங்டம் அமைப்பின் தலைவர் ஸ்ரீராம், வருங்கால துணை ஆளுநர் ஜாஹீர் உசேன் தலைமையில் வேம்பு, புங்கை, கொடிக்காய், வேங்கை, அரசமரம் உள்ளிட்ட 200 மரக்கன்றுகளை வில்லி பத்திரி சிலம்பம் அகாடமி ஆசிரியர் கருப்பசாமியிடம் வழங்கினர்.200 மரக்கன்றுகளை வில்லி பத்திரி சிலம்பம் அகாடமி ஆசிரியர் கருப்பசாமியுடன் இணைந்து சிலம்பம் கற்கும் மாணவ, மாணவிகள் வில்லிபத்திரி கிராமத்தை சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்