வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
1040 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.இந்தகோவிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் உயிரிழந்ததை அடுத்து மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை ,பௌர்ணமி ஆகிய நாட்கள் மட்டுமே பக்தர் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.மேலும் இந்த கோயிலுக்கு சென்றால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பதால் பக்தர்களின் வருகை என்பது அதிகரித்து காணப்படுகிறது. சகரகிரியில் தற்போதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதால் இது சித்தர்களின்சொர்க்க பூமி என அழைக்கப்படுகிறது .பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த கோயிலுக்கு வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கி இருந்தத நிலையில் இன்று அமாவாசை என்பதால் அதிகாலை முதலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோவில் அடிவாரப் பகுதியில் குவிந்து தற்போது மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.அமாவாசையை முன்னிட்டு காலை 6 மணி முதல் இரவு விடிய விடிய சதுரகிரி சுந்தர மகாலிங்கத்திற்கு 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.காலை 6 மணி முதல் 12 மணி மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டுள்ளது .நீரோடைகளில குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும் சாமி தரிசனம் முடித்த உடன் அடிவாரப் பகுதியை நோக்கி இறங்கி விட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மழை பெய்தால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.