அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்தை இன்று ஜப்தி செய்ய உத்திரவிட்ட மாவட்ட நீதிமன்றம்!
Subscribe விருதுநகர் videos
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயமணி இவருடைய தந்தை முனியாண்டி (வயது 62)முனியாண்டி என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் அரசு பேருந்தில் பின்புறம் ஏற முயற்சித்த பொழுது எதிர்பாராத விதமாக ஓட்டுனர் பேருந்து இயக்கியதில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று ஜெயமணியின் தந்தை முனியாண்டியின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடாக ரூபாய் 8 லட்சத்து 3700 ரூபாய் வழங்க வேண்டும் என கடந்த 2022-ம் தேதி விருது நகர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.அதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக இழப்பீடு வழங்காமல் அலட்சியமாக செயல்பட்டதால் இழப்பீடு வழங்க வேண்டும் என ஜெயமணி மீண்டும் மனுதாக்கல் செய்திருந்தார் இதை அடுத்து இழப்பீடு வழங்காததை கண்டித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வட்டியுடன் இழப்பீடு வழங்குவதற்காக அரசு பேருந்து நீதிமன்ற ஊழியர்களின் உதவியுடன் இன்று ஜப்தி செய்யப்பட்டு விருதுநகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஒப்படைக்கப்பட்டது கடந்த 2022 ஆம் ஆண்டு 8 லட்சத்து 3600 ரூபாய் இழப்பீடு வழங்காததை அடுத்து தற்போது வட்டியுடன் 11 லட்சத்து 25 ஆயிரத்து 951 ரூபாய் இழப்பீடு Unfortunately அரசு பேருந்து ஒன்று ஜப்தி செய்யப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது