டாஸ்மாக் மதுபான கடையில் புகுந்து ஊழியர்களை பணத்தை கொள்ளை!
1082 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் ஊருக்கு ஒதுக்குபுறமாக குண்டாறு பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது இந்த கடையில் கடந்த சனிக்கிழமை அன்று விற்பனை நேரம் முடிந்ததும் இரவு ஊழியர்கள் பணத்தை எண்ணி கொண்டிருந்த போது பயங்கர ஆயுதங்களுடன் கடைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் முககவசம் அணிந்தவாறு கடை ஊழியர்களை தாக்கி ரூ 5,37,000 பணத்தை கொள்ளை அடித்து தப்பிச் சென்றனர் இது குறித்து எஸ்.பி ஸ்ரீனிவாசக பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் மேலேந்தல் பகுதியில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றுள்ளார் அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் சிவகங்கையை சேர்ந்த தர்ஷிக் சரண்(19) என்பதும் திருச்சுழி மதுபான கடையில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள மற்ற மூன்று கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்