சாத்தூரில் ஆணி தேரோட்டம் குறித்து வட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை!
1188 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வெங்கடாசலபதி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் பாரம்பரியமாக ஆனி மாத திருத்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டும் வரும் ஜூலை மூன்றாம் தேதி தேரோட்ட நிகிழச்சி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தேரோட்டம் நடத்துவது குறித்து நகராட்சி, நெடுஞ்சாலை துறை, குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை, மின்சார துறை, தீயணைப்பு துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் தேரோட்டத்தில் பங்குபெறும் கிராம பொதுமக்கள் சமுதாயத் தலைவர்கள் என பலர் முன்னிலையில் சாத்தூர் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது கடந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்ட சுமார் 24 தீர்மானங்களும் வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது எனினும் சாத்தூர் மெயின் ரோடு மற்றும் தேர் ஓடும் ரத வீதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு பணிகளால் சாலைகள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதையும் சரியான சாலைகள் இல்லாமல் இருப்பதையும் முன்னிறுத்தி முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வாதிட்டனர். சாலைகள் தரமாக அமைக்கப்பட்ட பின்னரே தேரோட்டம் செயல்படுத்துவது குறித்து பேச வேண்டும் என்று தங்களது கருத்தை முன்னிறுத்தினர் இதனால் சிறிது நேரம் சலசலப்பு காணப்பட்டது பின்னர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசிய பின்னர் சாலை சீரமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது எனினும் இதுகுறித்து சாலை சீரமைக்கும் பணி முடிந்த பின்னர் பேச்சுவார்த்தை வைக்க வேண்டும் என்றும் கூறி பலர் வெளிநடப்பில் ஈடுபட்டனர். இறுதியாக சாத்தூர் வட்டாட்சியர் தேரோட்டத்திற்கு முன்பு மீண்டும் வரும் 24 ஆம் தேதி நகராட்சி, மின்வாரியம், நெடுஞ்சாலை துறை, குடிநீர் வடிகால் வாரியம், உள்ளிட்ட அரசு அலுவலர்களுடன் இது குறித்த சிறப்பு பேச்சு வார்த்தை நடத்தப்படும் எனவும் வரும் ஜூலை 1ஆம் தேதிக்குள் அனைத்து தரப்பு பணிகளையும் சிறப்பாக முடித்து தர ஏற்பாடு செய்யப்படும் எனவும் வட்டாட்சியர் தெரிவித்தார்.