நியாய விலை கடை ஊழியர்களை முற்றுகையிட்டு பெண்கள் திடீர் போராட்டம்!
1161 views
Subscribe விருதுநகர் videosவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் 850 குடும்ப அட்டைகள் தங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு ,கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர் .இதனால் இவர்கள் காலை முதல் மாலை வரையில் வரிசையில் இன்று காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதனால், மற்ற பணிகளுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது .இதனால் சன்னதி பகுதியில் உள்ள 350 குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு தனியாக நியாய விலை கடை வேண்டும் என்று துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் ,இன்று திடீரென்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நியாய விலை கடை ஊழியர்களை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .அப்பொழுது கடை ஊழியர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்குச் சென்ற மயிலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.