ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
1050 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சூரங்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த மையத்தில் புது சூரங்குடி கண்மாய், சூரங்குடி , நடுச்சூரங்குடி, அச்சங்குளம், பந்துவார்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் சிகிச்சை மற்றும் முதலுதவி பெற்று வருகின்றனர் மேலும் மகப்பேறு சோதனை, சிகிச்சை மற்றும் பிரசவத்திற்கு பின் சிகிச்சைகளும் நடைபெற்று வருகிறது. ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில் இந்த ஆரம்ப சுகாதார மையத்திற்குள் திடீரென பாம்பு புகுந்தது இதனை அடுத்து அங்குள்ள குழந்தைகள் பெண்கள் அலறி அடித்து ஓடினர். இதனை அடுத்து அங்குள்ள ஆண்கள் விரைந்து வந்து பாம்பினை பிடித்து அப்புறப்படுத்தினர் பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைதி திரும்பியது. பெண்கள் குழந்தைகள் சிகிச்சை பெற்று வரும் வார்டு பகுதிக்குள் பாம்பு புகுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.