சாத்தூரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்!
1107 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறுவதையொட்டி கடந்த மாதம் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது அதனை அடுத்து மே மாதம் 4 மற்றும் 5 தேதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அறிவுறுத்தப்பட்டது.பின்னர் சாலையோர வீடுகள் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதை அறிவுறுத்தும் வகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்த நிலையில் இன்று சாத்தூர் நகராட்சி நெடுஞ்சாலை துறை வருவாய் துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஏற்கனவே அளவீடு குறிக்கப்பட்டு அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டதால் இன்று ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளை தீவிரமாக அகற்றி வருகின்றனர் மேலும் இப்பணிக்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு பொருள்கள் உடன உடனுக்குடன் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறது சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் பணி நடைபெறுவதை ஒட்டி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது இதனால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.