27 பார்களுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்!
1030 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மொத்தம் 36 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு சிலவற்றை தவிர அனைத்து கடைகளிலும் பார் இயங்கி வருகிறது.பார் நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு தொகை செலுத்தி உரிமம் புதுப்பிப்பது அவசியம். ஆனால் பல பார்கள் உரிமம் புதுப்பிக்காமல் செயல்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில், உரிமம் இல்லாத பார்களை சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நகருக்கு உட்பட்ட பகுதிகளில் உரிமம் இன்றி செயல்பட்டு வந்த 12 பார்கள் மற்றும் சேத்தூர், செட்டியார்பட்டி, அட்டைமில் முக்கு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 15 பார்கள் என மொத்தம் 27 பார்களுக்கு காவல் துறையினர் பாதுகாப்புடன் வட்டாட்சியர் ராமச்சந்திரன் சீல் வைத்து பூட்டினார்.