சாலையை சீர் அமைக்கும் பணியின் நிதி வீண்.. பொதுமக்கள் அதிருப்த்தி
1060 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதி 33 வார்டுகளை கொண்டது. நகராட்சியில் திமுகவைச் சேர்ந்த ரவிக்கண்ணன் என்பவர் நகர் மன்ற தலைவராக உள்ளார்.நகர் பகுதியில் கோவிந்தன் நகர் காலனி, அசோக் நகர்,ரைட்ன்பட்டி, மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 79 லட்சம் மதிப்பீட்டில் மத்திய நிதி ஆணையம்,நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்கோவிந்தன் நகர் காலனி 33 வது வார்டு பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் தரமான சாலைகள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் இரண்டு இடங்களில் தற்போதைய விடிய திமுக ஆட்சியில் இரண்டு இடங்களில் தனிப்பட்ட சுயநலத்திற்காக பைப் லைன் பதிப்பதற்கு தோண்டப்பட்ட சாலை பள்ளம் மேடாகியது.இந்நிலையில் அந்த இரண்டு இடங்களில் மட்டும் சாலைகளை சீரமைக்காமல் நன்றாக உள்ள தார் சாலைகள் முழுவதும் இயந்திரங்களால் மேலோட்டமாக தோண்டப்பட்டு மறு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவிந்த நகர் காலனியில் தார் சாலைகளே இல்லாத தெருக்களில் தார் சாலையை அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்த நிலையில் அதை கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் நன்றாக உள்ள தார் சாலையை தோண்டி சீரமைக்கும் பணியில் ஈடுபடுவது கமிஷனுக்காக செயல்படுவதாக அப்பகுதியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அரசு நிதியை வீணடித்தும் பணத்திற்காக மோசடி செய்வதாக நகராட்சி நிர்வாகத்தின் மீது அப்பகுதி மக்கள் புகர் தெரிவிக்கின்றனர்.அரசு நிதியை வீணடித்த நகராட்சி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.