தாயில்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்பாட்டம்!
1064 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அதிக மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பட்டாசு தொழிலை நம்பி பட்டாசு ஆலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தாயில்பட்டி ஊராட்சியில் நீண்ட நாட்களாக போதிய வாருகால்வாசி, தெருவிளக்கு, வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும்,மேலும் குப்பைகள் நீண்ட நாட்களாக தேங்கியுள்ளதால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார கேடு ஏற்பட்டு இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், இதனை கண்டித்து வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் பல முறை புகார் கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதனைக் கண்டித்து,விருதுநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் பால்பாண்டி தலைமையில் தாயில் பட்டி கிராமத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேருந்து நிலையம் அருகே வெம்பக்கோட்டை யூனியன் அலுவலக அதிகாரிகளை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்பாட்டத்தின்போது வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் தங்கபாண்டி, வடக்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜபாண்டி, கிழக்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாண்டிஸ்வரன். சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஐயப்பன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.