இலவச வீட்டுமனை பட்டா வேண்டி 40க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
1031 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒ. கோவில்பட்டி கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்களில் பெரும்பான்மையோர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்களாகவும், அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.இவர்கள் அனைவரும் இலவச வீட்டுமனை வேண்டி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு எந்த பயனும் இல்லாததால் ஓ. கோவில்பட்டியை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் மனு அளித்தனர்