விருதுநகரில் பாஜக சார்பில் மண்டல் செயற்குழு கூட்டம்-9 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
1033 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் - மதுரை ரோட்டில் அமைந்துள்ள பாஜக கட்சி அலுவலத்தில் நகர தலைவர் நாகராஜ் தலைமையில் மண்டல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த மண்டல் செயற்குழு கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் வரும் பத்து மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக மிகப்பெரும்பான்மையான வெற்றிபெற்று மீண்டும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை இந்திய பிரதமராக்க ஒவ்வொரு தொண்டர்களும் உழைக்க வேண்டும் என்பது பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கபட்டன.மேலும் நமது நகரில் நடைபெற்று வரும் ஜல் ஜீவன் குடிநீர் குழாய் இணைப்புக்காக தோண்டப்பட்ட தெருக்களில் உடனடியாக பேட்ஜ் ஒர்க் செய்து சமன் செய்து தரவும் திட்டத்தை விரைந்து முடித்து தர நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியும் , அருப்புக்கோட்டை ரோடு மேம்பாலத்தில் உள்ள சோடிய விளக்குகள் சரிவர எரியவில்லை போதிய பராமரிப்பும் இல்லை எனவே அதனை முழுமையாக அகற்றிவிட்டு (LED) விளக்குகளை மாற்றிதர நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும் என்றும்,அல்லம்பட்டி முக்கு ரோடு முதல் அரசுமருத்துவகல்லூரி மருத்துவமனை வரை உள்ள ராமமூர்த்தி சாலையில் உள்ள டியூப்லைட்களை அதிக வெளிச்சம் ஏற்படுத்தி தர வேண்டும், புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்த அனைத்து அரசு நிர்வாகத்தை வலியுறுத்தி அனைத்து பேருந்தும் நகர் வழியாக செல்ல ஆவணம் செய்ய வேண்டும். இரவு நேரங்களில் வெளியூர் சென்று மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர் அதனை முறைப்படுத்த வேண்டும், உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மேலும் இந்த நிகழ்வின் போது முன்னாள் ராணுவ பிரிவு மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, பட்டியல் அணி தலைவர் பாலமுருகன், மாவட்ட துணைத்தலைவர் குமரேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்