ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ கண்ணன் திருக்கோவிலில் கும்பாபிஷேக திருவிழா!
1033 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ கண்ணன் திருக்கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டி பகுதியில் மிகப் பழமை வாய்ந்த ஸ்ரீ கண்ணன் திருக்கோவில் உள்ளது.இதன் கும்பாபிஷேக விழா நேற்று 31 ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து இன்று காலை கணபதி பூஜை,சுப்ரபாத பூஜை, கோபூஜை, விஷ்ணு சகஸ்ரநாம பூஜைகள் நடைபெற்றன. பூஜையில் கலந்து கொண்ட வேத விற்பனர்கள் மேளதாளங்களுடன் கும்பாபிஷேகம் கும்பத்தை திருக்கோவிலின் விமான உச்சிக்கு கொண்டு சென்று அதில் உள்ள கலசத்தில் வேத மந்திரங்கள் முழங்க பக்தர்களின் கோபாலா கோபாலா என்ற கோஷத்துடன் புனித நீர் ஊற்றப்பட்டது. இதனையடுத்து மூலஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரம் மற்றும் வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாவி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.