காளியம்மன், துர்க்கையம்மன் கோவில் சப்பர ஊர்வலம் சதுர்த்தியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்!
1123 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் காளியம்மன், துர்க்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்அதனை முன்னிட்டு இந்த வருடமும் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் சப்பர வீதியுலா இன்று நடைபெற்றது.இந்த சப்பர ஊர்வலத்தில் காளியம்மனும், துர்க்கையம்மனும் சர்வ அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.மேலும் ஊர்வலத்தில் பெண்கள் ஏராளமனோர் முளைப்பாரி எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழவும் பக்தர்கள் வெள்ளத்திலும் அம்மன் வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.