உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் உணவுப் பொருட்களின் தரத்தினை ஆய்வு!
1064 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் மூலம், உணவுப் பொருட்களின் தரத்தினை உடனுக்குடன் ஆய்வு செய்ய நடமாடும் ஆய்வகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.தமிழகத்தில் உணவுப்பொருட்களின் தரம், கலப்படம் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, அதன் மாதிரிகளை சேகரித்து ஆய்வுகளுக்கு அனுப்பி, அதன் முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.உணவுப் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்து உடனுக்குடன் முடிவுகள் அறிந்து கொள்ள உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் நடமாடும் ஆய்வகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.விருதுநகர் மாவட்டத்தில், உணவுப் பொருட்களின் தரத்தினை உடனுக்குடன் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறையின் நடமாடும் ஆய்வகம் 03-05-2023 முதல் 31-05-2023 வரை வலம் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நடமாடும் ஆய்வகத்தின் மூலம் உணவுப் பொருள் கலப்படம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று சோதனைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நடமாடும் ஆய்வகத்தில், கடைகளில், கிட்டங்கிகளில் சேகரிக்கப்படும் மாதிரிகளை உடனடியாக பரிசோதனை செய்து முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.மே -2023 மாதம் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முறையே விருதுநகர் நகராட்சி, அல்லம்பட்டி மற்றும் ஆர்.ஆர்.நகர் பகுதிகளிலும், 5, 8 மற்றும் 9 தேதிகளில் அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி பகுதிகளிலும், 10 மற்றும் 11 தேதிகளில் நரிக்குடி, திருச்சுழி பகுதிகளிலும், 12, 15 மற்றும் 16 தேதிகளில் சாத்தூர், தாயில்பட்டி, ஏழாயிரம்பண்ணை பகுதிகளிலும்;, 17, 18 மற்றும் 19 தேதிகளில் சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சி பகுதிகளிலும்,22 மற்றும் 23 தேதிகளில் சாட்சியாபுரம், வத்திராயிருப்பு பகுதிகளிலும், 24, 25 மற்றும் 26 தேதிகளில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர், மம்சாபுரம் மற்றும் கிருஷ்ணன் கோவில் பகுதிகளிலும் 29, 30 மற்றும் 31 தேதிகளில் இராஜபாளையம், செட்டியார்பட்டி மற்றும் சம்சிகாபுரம் பகுதிகளிலும்; ஆய்வுகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பொருட்களின் தரத்தினை நடமாடும் ஆய்வகம் மூலம் பரிசோதனை செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ரவிகுமார், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மரு.செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.சிவக்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.