விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நூதன முறையில் நகை திருட்டு !
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சீனியாபுரம் தெருவை சேர்ந்த பாஸ்டின்ராஜ் சபரியம்மாள் தம்பதியினர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சீனியாபுரம் பகுதியில் பீகாரை சேர்ந்த மிதுன்குமார்,சர்வன்குமார் ஆகிய வட மாநில இளைஞர்கள் இருவர் தங்கச் செயினை பாலிஸ் செய்து கொடுப்பதாகவும் பாலிஸ் செய்வதற்கு 50 ரூபாய் மட்டும் தந்தால் போதும் என்றும் தங்களுக்கு உணவிற்கே வழியில்லை என்று வீடு வீடாக சென்று கூறியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் சபரியம்மாள் இறக்கப்பட்டு ஐம்பது ரூபாயும் தான் கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் தங்க தாலி செயினை பாலிஷ் போடுவதற்காக வடமாநில இளைஞர்களிடம் கழற்றி கொடுத்துள்ளார். வடமாநில இளைஞர்கள் தங்கத்தாலியை ஒரு சில ஆசிட் திரவியங்களில் முக்கி எடுத்து பாலிஷ் போட்டு சில வினாடிகள் கழித்து சபரியம்மாள் கையில் கொடுத்துள்ளனர்.கையில் வாங்கிய நகை லேசாக இருந்ததாகவும் என்னுடைய நகை இது இல்லை என்று வட மாநில இளைஞர்களின் கையைப் பிடித்து கேட்ட போது சபரியம்மாளை கீழே தள்ளிவிட்டு இருவரும் விழுந்து அடித்து ஓடியுள்ளனர்.சபரியம்மாள் கூச்சலிட்டபோது அக்கம் பக்கத்தில், தெருவில் இருந்தவர்கள் வட மாநில இளைஞர்கள் இருவரையும் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்ததில் காயம் ஏற்பட்டது.நகர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வட மாநில இளைஞர்களான மிதுன்குமார்,சர்வன்குமார் ஆகிய இருவரை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.பின்னர் தங்க தாலிச் செயினை எடை போட்டு பார்த்தபோது 32 கிராமிற்கு பதிலாக 26 கிராம் தான் இருந்துள்ளது என்பது தெரிய வந்தது.வட மாநில இளைஞர்கள் பயன்படுத்திய ஆசிட் திரவியங்களை கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சேலம் மாவட்டம், வேலூர்,ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் இதேபோல் நூதன முறையில் நகை திருட்டில் ஈடுபட்டதும் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து மூன்று மாதங்களுக்கு முன்புதான் வெளியே வந்ததாகவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.பின்னர் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். வட மாநில இளைஞர்கள் நூதன முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.