விருதுநகரில் ஊர் பொதுமக்களுக்கு சொந்தமான இடத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் அதிகாரிகள்!
1046 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே சாமி தேவன்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் விவசாயம் சார்ந்த தொழிலை செய்துவருகின்றனர் இந்த கிராமத்தை சுற்றி விவசாய நிலங்கள் அதிகம் உள்ளது.மேலும் ஊர் பொதுமக்களுக்கு சொந்தமாக சுமார் 1 ஏக்கர் நிலம் உள்ளது எனவும் இந்த நிலத்தில் ஊர் பொதுமக்களுக்கு சொந்தமாக கோவிலும், மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு தொடக்கப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த நிலத்தை சுற்றி நீர்நிலை கண்மாய் உள்ளது. இந்த நீர் நிலைக் கண்மாயில் இருந்துதான் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கும் நீரை பயன்படுத்தி வருகின்றனர்.ஊர்பொதுமக்களுக்கு சொந்தமாக உள்ள இந்த நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் விதமாக வருவாய்த்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் செயல்பட்டு வருவதாகவும்,இது சம்மந்தமாக ஊர் பொதுமக்கள் சார்பாக வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியரிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்,மேலும் இது சம்மந்தமாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பாக மாநில தலைவர் 0.A.நாராயணசாமி தலைமையில் 30 க்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்