இடி மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து
1039 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சாணார்பட்டியில் மாடசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது இந்த பட்டாசு ஆலையில் சுமார் 30க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது இதில் இன்று 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியிள் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது இதில் பட்டாசு ஆலையில் உள்ள ஒரு அறையில் மின்னல் தாக்கியதில் பத்திற்கும் மேற்பட்ட அறைகள் வெடித்து சிதறி தீக்கரை ஆயின இரண்டு அறைகள் தரைமட்டமானது. மழை பெய்ய தொடங்கியவுடன் தொழிலாளர்கள் அனைவரும் வெளியே சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.மேலும் இந்த பட்டாசு ஆலை விபத்து குறித்து தகவல் அறிந்து சிவகாசியில் இருந்து தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து சம்பவம் குறித்து எம். புதுப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.