பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து
1045 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளத்தில் ரவி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது இந்த பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் வைக்கப்பட்டிருந்த மூலப் பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து அருகில் இருந்தவர்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு குழுவினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த தீ விபத்து சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.