விருதுநகரில் 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக உண்ணாவிரதம்!
1023 views
Subscribe விருதுநகர் videosதிமுக அரசு தேர்தலில் வாக்குறுதி அளித்தபோது 19 அம்ச கோரிக்கைகள தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் சிவஞானம் தலைமையில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல்,புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், CPS திட்ட ஊழியர்களுக்கு பணிகொடை வழங்க வேண்டும், முடக்கிவைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும், அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும்,வருவாய் கிராம உதவியாளர்களுக்கும் அலுவலக உதவியாளர்களுக்கு இணையான ரூ 15700 ஊதியம் வழங்கிட வேண்டும், சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக தமிழக அரசு அறிவித்திட வேண்டும்,எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் உள்ள பணியாளர்களை பணிநிரந்தரம் செய்திடவேண்டும், திமுகவின் தேர்தல் கால வாக்குறுதிப்படி நிர்வாகத் தீர்பாயம் அமைத்திட வேண்டும். காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்திட வேண்டும், காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும், டெங்கு மஸ்தூர் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.