புரட்சி பாரதம் கட்சி சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் !
1049 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகரில் புரட்சி பாரதம் கட்சி சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக புரட்சி பாரதம் கட்சி சார்பில்,சிவகாசி மாநகராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு பகுதிகள் இருந்தும் சிவகாசி புது தெருவில் உள்ள பொத்தமரத்து ஊரில் குடியிருக்கும் பறையர் பேரின மக்களின் வீடுகளை இடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் புரட்சி பாரதம் கட்சியினர் சிவகாசி மாநகரட்சியைகண்டித்தும் தமிழக அரசுக் எதிராகவும் பல்வேறு கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்