ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தீபஜோதி ரத யாத்திரை வருகை!
1033 views
Subscribe விருதுநகர் videosமுன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 32வது நினைவு தினத்தை முன்னிட்டு வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் M.S.திரவியம் தலைமையில் 30 பேர் கொண்ட குழு கடந்த 15ம் தேதி கன்னியாகுமாரியில் உள்ள ராஜீவ் காந்தி சிலை முன்பு தீப ஜோதி யாத்திரையை தொடங்கினர்.இந்த ராஜீவ் காந்தி தீப ஜோதி ரத்திரையானது பொதுமக்களிடையே மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், தீவிரவாதத்தை ஒழிக்கும் விதமாகவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதாமாக இந்த ரதயாத்திரை.கடந்த 15ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி வழியாக நேற்று இரவு விருதுநகர் வந்தடைந்து.விருதுநகர் வந்தடைந்த ராஜீவ் காந்தி தீபஜோதி ரத யாத்திரையை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வெயிலு முத்து, மாவட்ட தலைவர் நாகேந்திரன், துணைத்தலைவர் மாயா, மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி, கவுன்சிலர் வள்ளிக்குட்டி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்றனர்.இந்த ராஜிவ்காந்தி தீப ஜோதி ரதயாத்திரையில் வந்தவர்கள் இன்று காலை விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்பு விருதுநகரில் இருந்து புறப்பட்டு திருமங்கலம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், வழியாக சென்று வருகின்ற 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி சிலை முன்பு இந்த ரதயாத்திரை முடிவடைகிறது