தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவன் சைக்கிள் பயணம்!
1027 views
Subscribe விருதுநகர் videosகடந்த 2019 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவருடை பிறந்த தினமான அக்டோபர் மாதம் 2ம் தேதி நாடுமுழுவதும் பிரதமர் மோடி அவர்கள் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார்,இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பொது இடங்களை அசுத்தப்படுத்தகூடாது என்றும், அசுத்தப்படுத்துபவர்களும் அதை நிறுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தொடங்கி வைத்தார்மீண்டும் அந்த நல்ல நோக்கத்தை இந்திய மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக விருதுநகரைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவன் வீரமணிகண்டன் தான் பயிலுகின்ற காரியாபட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். அந்த மாணவனை கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், சக கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் பயணம் வெற்றிகராமாக அமையட்டும் என வாழ்த்து சொல்லி அவரை வழியனுப்பிவைத்தனர் இவர் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி விருதுநகரிலிருந்து ஜம்மு காஷ்மீர் வரை 20 நாட்கள் சைக்கிள் பயணம் மேற்கொள் தூய்மை இந்தியா திட்டத்தை பற்றி இந்திய மக்களிடையே எடுத்து சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ,இந்த சைக்கிள் பயணத்தை விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தான் பயிலுகின்ற கல்லூரியில் இருந்து தொடங்கி மதுரை, திண்டுக்கல், கரூர், வேலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், வழியாக பெங்களூர், ஹைதராபத், நாக்பூர், டெல்லி, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் வழியாக ஒருநாளைக்கு 200 கி.மீட்டர் தூரம் வரை செல்ல இருப்பதாகவும் சுமார் 20நாட்களில் 3500 கிமீட்டர் பயணம் செய்து ஜம்மு காஷ்மீரில் தனது பயணத்தை முடிப்பதாக தெரிவித்தார்