பள்ளி வாகனங்கள் பாதுகாப்பானதாகவும் நல்ல முறையில் உள்ளதா என ஆய்வு
1062 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகரில் தனியார் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பானதாகவும் நல்ல முறையில் உள்ளதா என்பது குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ மாணவிகளை அழைத்து வர பயன்படுத்தப்படும் 135 பள்ளிகளுக்குரிய 774 வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வு பணிகளில் பள்ளி வாகனங்களில் பயன்படுத்தப்படும் தீயணைப்பு கருவிகள், அவசர வழிகள், வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது மேலும் விபத்து காலங்களில் தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள் சமயோசித்த மாத செயல்பட்டு பாதிப்புகளை குறைப்பதற்காக மருத்துவ அலுவலர்கள் தீயணைப்பு துறையினர் உள்ளிட்டவர்களின் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது இந்த தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு பணியை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் பார்வைக்கு கூடுதல் ஆலோசனைகள் வழங்கினார் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 774 வாகனங்களில் 80 வாகனங்களில் சிறுசிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்