ஆடியோ விவகாரம் வேற அமைச்சரவை மாற்றம் வேற
ஆடியோ விவகாரம் வேற அமைச்சரவை மாற்றம் வேற
பி.டி.ஆர் ஆடியோ விவகாரம் என்பது முடிவுற்றது எனவும் பி.டி.ஆர் ஆடியோ விவகாரத்தையும் அமைச்சரவை மாற்றத்தையும் சேர்த்து பார்ப்பது என்பது அவ்வளவு தெளிவாக இருக்காது என விருதுநகரில் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்பேட்டிவிருதுநகரில் காங்கிரஸ் கட்சி எம்.பியும் மக்களவை காங்கிரஸ் கட்சியின் கொறடாவுமான மாணிக்கம் தாகூர் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய மாணிக்கம் தாகூர்கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற இருக்கிறது எனவும் இந்த வெற்றி என்பது பணபலத்திற்கும் மத அரசியலுக்கும் கர்நாடகா மற்றும் தேசிய ஊடகங்களின் பாரபட்சமான பார்வைக்கும் மற்றும் தேர்தல் கமிஷன் ஒரு பக்கமாக செயல்பட்டும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தடைகளை மீறி காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறப்போகிறது என்பது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன என்றார்.மேலும் கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்பில் கர்நாடகாவில் தொங்கும் சட்டமன்றம் அமையும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதை காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை என்றார்.மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் தமிழக அரசால் அமைக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கை குழுவிலிருந்து ஜவகர் நேசன் விலகி இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாணிக்கம் தாகூர் எம்.பி. மாநில கல்வி குழுக்களில் இருக்கும் அறிஞர்கள் அவருடைய கருத்துக்களை எடுத்து வைப்பதும் அதனை அரசாங்கம் அந்த கருத்துக்களை கேட்டதற்கு பின்னாலே அரசு முடிவெடுக்கும் என்றார். மேலும் அவர்கள் சொல்கிற கருத்துக்களை எல்லாம் ஏற்பது அரசாங்கத்தின் கடமை கிடையாது எனவும் மேலும் இந்தியா முழுவதும் உருவாக்கப்பட்ட இப்படிப்பட்ட குழுக்களில் சிறு சிறு பிரச்சனைகளை பார்க்க முடியும் எனவும் மேலும் இந்த விவகாரத்தில் கல்வித்துறை அமைச்சர் ஒரு நல்ல முடிவு எடுப்பார் என்றார்.தமிழக நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்று இருப்பது என்பது விருதுநகர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் என்றார். மேலும் அமைச்சரவையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது என்றார் மேலும் டெல்டா மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறேன் என்றார்பி.டி.ஆர் ஆடியோ விவகாரம் என்பது முடிவுற்றது எனவும் பி.டி.ஆர் ஆடியோ விவகாரத்தையும் அமைச்சரவை மாற்றத்தையும் சேர்த்து பார்ப்பது என்பது அவ்வளவு தெளிவாக இருக்காது என்றார் மேலும் இந்த முடிவு என்பது முதல்வரின் முடிவு என்றார் அரசாங்கத்தில் முதல்வர் ஒரு முடிவை எடுக்கும் போது தீர ஆலோசித்து எடுப்பார் எனவும் மேலும் முதல்வர் எடுத்த முடிவு என்பது வரவேற்கத்தக்கது என்றார்.மேலும் இந்த நிகழ்வின்போது சிவஞானபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தொலைத்தொடர்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் மீனாட்சிசுந்தரம் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்Updated: 11 May 2023, 6:02 pm