மே தினத்தை முன்னிட்டு கஞ்சா மற்றும் புகையிலை விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய கோரிக்கை!
1047 views
Subscribe விருதுநகர் videosமே தினமான இன்று தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்திரவிட்டது.அதன் ஒரு பகுதியாக இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் லீலாவதி சுப்புராஜ் தலைமையில் கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது.இந்த கிராமசபைக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் நிர்வாகிகள் கலந்துகொண்டு,சித்து ராஜபுரம் கிராமத்தில் உள்ள கடைகளில் குட்கா, கஞ்சா மற்றும் புகையிலைகள் விற்பனையை முற்றிலுமாக தடுக்க காவல்துறை உதவியுடன் கிராம பஞ்சாயத்து தலைவர் கடைகளை ஆய்வு செய்து விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் கடைகளை சீல் வைத்து விற்பனை செய்பவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும்,மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் செயல்படும் தனியார் மற்றும் அரசு மதுபான கடைகளை அகற்றி குடிபோதை இல்லாத கிராம பஞ்சாயத்தாக மாற்ற நடவடிக்கை வேண்டும் எனவும், அனைத்து தெருக்களிலும் உள்ள வாருகால்களை சீரமைத்து புதுப்பிக்க வேண்டும்,கிராம பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு ஒவ்வொரு தெருக்களிலும் கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர் லீலாவதி சுப்புராஜ் அவர்களிடம் மனு அளித்தனர்.