சிவகாசியில் மனைவி இறந்து 8 ஆண்டுகள் ஆன நிலையில், சிலிக்கான் சிலை தயார் செய்த தொழிலதிபர்!
1031 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் மாவட்டம் சிவகாசி நேஷனல் காலனியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 85). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (65) என்பவருக்கும் கடந்த 1968ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆனந்த், அம்சா, அமிர்தபானு, பாபு என்ற 4 குழந்தைகள் அனைவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் நடந்து விட்டது. இவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் உள்ளனர். ஒரு அச்சகத்தில் மேலா ளராக பணியாற்றி வந்த நாராயணன் பின்னர் காலப்போக்கில் சொந்த மாக அச்சம் நடத்தி வந்துள்ளார். தற்போது ஓய்வில் இருக்கிறார். இவரது மனைவி ஈஸ்வரி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென இறந்து விட்டார். மனைவியின் இறப்பு நாராயணனால் தாங்கி கொள்ள முடியவில்லை. தனிமை அவரை கடுமையாக தாக்கி உள்ளது.இதனால் வீடு முழுவதும் தனது மனைவியின் புகைப்படங்களை ஓட்டி பாதுகாத்து வந்துள்ளார்.இதற்கிடையில் மனைவியின் உருவ சிலையை வெண்கலத்தில் தயார் செய்து வீட்டில் வைத்து அழகு பார்க்க ஆசைப்பட்ட நாராயணன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலையில் உள்ள ஒரு சிற்பியிடம் சென்று மனைவியின் புகைப் படத்தை கொடுத்து ரூ.2 லட்சம் செலவில் மார்பளவு சிலை தயார் செய்து கொண்டு வந்து வீட்டில் வைத்து அதற்கு பூஜைகள் செய்து வந்துள்ளார்.நினைவு நாளில் உறவினர்களை வரவழைத்து சிறப்பு பூஜையும் செய்துள்ளார். இதற்கிடையில் பெங்களூருவில் உள்ள ஒருவர் சிலிக்கன் மற்றும் ரப்பரை சேர்த்து மனித உருவம் தயார் செய்து கொடுப்பதாக தகவல் கிடைத்து பெங்களூரு சென்று அந்த தொழில்கூடத்தை நேரில் பார்த்து மனைவியின் சிலையை தயார் செய்து கொடுக்க கேட்டுள்ளார்.கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஈஸ்வரியின் உருவத்தை சிலிக்கன் மற்றும் ரப்பரை கொண்டு தயார் செய்ய தொடங்கிய அந்த நிறுவனம் சுமார் 14 மாதங்கள் கழித்து ஈஸ்வரியின் உருவத்தை தத்ருபமாக வடிவமைத்து கொடுத்தது. இதனை ரூ.9லட்சம் கொடுத்து வங்கிய நாரயணன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகாசிக்கு கொண்டு வந்து உறவினர்களை அழைத்து நினைவு நாளின் போது சிறப்புபூஜை செய்துள்ளார். ஈஸ்வரியின் சிலையை நேரில் கண்ட உறவினர்கள் மெய்மறந்து போனார்கள். மறைந்த ஈஸ்வரி ஒரு நாற்காலியில் அமர்ந்து இருப்பது போல் இருந்தது. ஈஸ்வரியின் சிலைக்கு பட்டுப்புடவை மற்றும் நகைகளை அணிவித்து நாராயணன் அழகுபார்த்து வருகிறார்.