அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பாக 5 அம்ச கோரிக்கை வலியுறுத்தல்!
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் எஸ்தர் ராணி தலைமையில்,தற்போது தமிழகத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில் இரண்டு வயது முதல் 5 வரை உள்ள குழந்தைகளின் நலன் கருதியும்,கொடும் கோடை வெயிலின் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு கோடை விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மாத காலம் விடுமுறை வழங்கிட வேண்டும், 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்த விதமான நிபந்தனை இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும்.அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக இரண்டு அல்லது மூன்று மையங்கள் இன்சார்ஜ் பார்ப்பதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள் அதனை சரிசெய்திடவேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக தமிழக அரசு நிரப்பிட வேண்டும், அங்கன்வாடி மையங்களின் மின்கட்டணத்தை அரசே கட்ட வேண்டும் உள்ளிட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தல். விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் இருந்து அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பி மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.