விருதுநகர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி இயங்கிய 104 மதுக்கூடங்கள் சீல்!
1020 views
Subscribe விருதுநகர் videosஅதையடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் டாஸ்மாக் அதிகாரிகள், கலால்துறையினர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறை, பல்வேறு குழுக்களாகச் சென்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மதுக்கூடங்களில் கடந்த 2 நாள்களாக திடீர் சோதனை நடத்தினர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் .விருதுநகர், சாத்தூர், ராஜபாளைம், சேத்தூர், வத்திராயிருப்பு, மகாராஜபுரம், அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, பந்தல்குடி, காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி, வீரசோழன், சிவகாசி, திருத்தங்கல், சாட்சியாபுரம் உள்ளிட்ட பகுதிளில் காவல்துறையினர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்தினர்.அதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 121 மதுக்கூடங்கள் அனுமதியின்றி இயங்கி வந்தது தெரியவந்தது. அதில், 104 மதுகூடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்