வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்!
1054 views
Subscribe தமிழ்நாடு videosமானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களின் போது தினந்தோறும் சுவாமி பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதியுலா செல்வது வழக்கம். இந்தாண்டு சித்திரை திருவிழாவிற்காக உற்சவருக்கு நேற்று அதிகாலை பதினொரு வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு அலங்காரத்துடன் மண்டபத்திற்கு எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து அர்ச்சகர் கோபி மாதவன் மூலவர் சுந்தரராஜ பெருமாள் என்னும் வீர அழகருக்கும் உற்சவருக்கும் கையில் காப்பை கட்டினார். இதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான எதிர்சேவை மே.4ம் தேதியும், அழகர் ஆற்றில் இறங்குதல் மே.5ம் தேதியும்,நிலாச்சோறு நிகழ்ச்சி மே.6ம் தேதியும் நடைபெற உள்ளது.