மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலில் மீண்டும் கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு!
1017 views
Subscribe விழுப்புரம் videosவிழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான தர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் இந்து சமய நிலைத்துறை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வராததால் கிராம மக்களே கோவிலுக்கான பராமரிப்பு மற்றும் திருவிழா பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெற்றபோது மேல்பாதி காலனி பகுதியை சார்ந்த தலித் மக்கள் கோவிலில் உள்ளே நுழைய முயன்ற போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவில் வாயிலில் நின்று சாமி தரிசனம் செய்ய கூறி தலித் மக்களை அனுப்பி வைத்து விட்டனர். கோவில் உள்ளே சென்று தான் சாமி தரிசனம் செய்வோம் என தலித் மக்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.