மூன்று வயது குழந்தையை மீட்டுத் தரக் கோரி மண்ணெண்ணெய் கேனுடன் மனு அளித்த பெண்ணால் பரபரப்பு!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள அக்கராயப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த லலிதா என்பவருக்கும் பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது இந்த நிலையில் இவர்களுக்கு மூன்று வயதில் அஸ்வின் என்ற ஆண் குழந்தை உள்ளது.லலிதா கணவருடன் சண்டையிட்டு கடந்த ஒரு வருடமாக தாய் வீட்டில் வசித்து வருகின்றார் இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அன்று முருகன் அக்கராயப்பாளையம் கிராமத்தில் உள்ள லலிதாவின் தாய் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து லலிதாவை தகாத வார்த்தையால் தீட்டிவிட்டு லலிதாவுடன் இருந்த அவர்களது மூன்று வயது மகன் அஸ்வினையும் பறித்துக் கொண்டு சென்று விட்டதாகவும் இது குறித்து முருகன் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டபோது முருகன் மற்றும் அவரது தாய் செல்வி மற்றும் அவரது சித்தி விசாலாட்சி ஆகிய மூவரும் சேர்ந்து குழந்தையை தர மறுத்து லலிதாவை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது இதுகுறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதுமட்டுமின்றி குழந்தையை தர மறுத்து சித்திரவதை செய்து வருவதாகவும், எனவே தனது குழந்தையை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லலிதா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மண்ணெண்ணெயை பிடுங்கி வைத்தனர்.தொடர்ந்து அந்த பெண் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து மனு அளித்தார். இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக காவல்துறையினரை உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து அந்தப் பெண் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.vilupuramTimesXP TamilUpdated: 22 May 2023, 4:13 pm