சாராயம் விற்றால் கைது செய்யப்படுவார்கள் என வீதி வீதியாக அறிவுறுத்திய பெண் ஊராட்சி மன்ற தலைவர்!
1054 views
Subscribe விழுப்புரம் videosவிழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீசார் கடந்த நான்கு நாட்களாக நடந்த மது வேட்டையில் இதுவரை 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 219 குற்றவாளிகள் கைது செய்து அவர்களிடமிருந்து 1166 லிட்டர் சாராயமும் 1892 மது பாட்டில்களும் 236 லிட்டர் கள்ளு, ஐந்து இருசக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர் மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி போலீசாரும் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் விழுப்புரம் அருகே உள்ள சேர்ந்தனூரில் கள்ளச்சாராயம் விற்றால் காவல் துறை மூலம் கைது செய்யப்படுவார்கள் என்றும் இந்த கிராமத்தில் மது யாரும் விற்கக் கூடாது என்று தெருத்தெருவாக ஒலிபெருக்கி மூலம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் சுதா பாபு அறிவுறுத்தியுள்ளார் இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது மேலும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்று தெருத்தெருவாக ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்துள்ள ஊராட்சி மன்ற தலைவரை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு வருகின்றனர்.