350 கிராம் கஞ்சா பறிமுதல்: 5 பேரை போலீசார் கைது!
1045 views
Subscribe விழுப்புரம் videosவிழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் டிஎஸ்பி சுனில்குமார் உத்தரவின் பேரில் கஞ்சா நடமாட்டம் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோட்டக்குப்பம் சென்னை ஈ.சி.ஆர் சாலை ரவுண்டானாவில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஒரே பைக்கில் வந்த இரண்டு பேரின் உடைமைகளை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் கோட்டகக்குப்பத்தைச் சேர்ந்த முகமது ரஃபிக் வயது 22, புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த யுவராஜ் வயது 24 ஆகியோரிடம் 240 கிராம் கஞ்சா இருந்ததை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர். கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் ஈ.சி.ஆர் சாலை நடுக்குப்பம் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் அவர் 110 கிராம் கஞ்சா பொட்டலத்தை வைத்திருந்தார். கஞ்சா கடத்திய கோட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த தேசமுத்து வயது 23 என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மரக்காணம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த கலிகுப்பத்தை சேர்ந்த ராஜி வயது 27, என்பவரையும் புதுவை-திண்டிவனம் புறவழி சாலையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் கிளியனூர் அருகே கஞ்சாவுடன் வந்த கொந்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் வயது 27 என்பவரையும் கைது செய்தனர். மேலும் புதுச்சேரி பகுதியிலிருந்து சாராய பாக்கெட்டுகளை கொண்டு வந்து போலீசை கண்டதும் போட்டுவிட்டு தப்பி சென்ற கோவாடி கிராமத்தைச் சேர்ந்த பிச்சைமுத்து வயது 50 என்பவரை போலீஸ் தேடி வருகின்றனர். அவர் கடத்திச் சென்ற 27 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்செய்யப்பட்டது. இன்று ஒரே நாளில் 4 இடங்களில் கோட்டகுப்பம் டிஎஸ்பி சுனில்குமார் உத்தரவின் பேரில் மூன்று இடங்களில் போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்ததும், புதுவையிலிருந்து கடத்தப்பட்ட சாராய பாக்கெட்டுகளை போலீஸ் பறிமுதல் செய்த சம்பவம் கோட்டக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.