குடிநீர் வழங்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியல்
1021 views
Subscribe விழுப்புரம் videosவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நடுவந்தல் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியின் மையப்பகுதியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக குடிநீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது, இந்த குடிநீர் தொட்டியில் இருந்து தான் இங்குள்ள பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது, இந்நிலையில் குடிநீர் தொட்டியின் மேல் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சேதம் அடைந்துள்ளது, இதனால் இதில் உள்ள குடிநீரில் பறவைகளின் எச்சம் ,உயிரிழந்த பறவைகளின் உடல்கள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை காணப்படுவதாகவும் இதனால் அவ்வபொழுது துர்நாற்றம் விசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது, இதனால் இன்று இல்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த வழியே திண்டிவனம் வரும் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் அன்னக்கொடி போராட்டத்தில் ஈடுபட மூன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி,அங்கிருந்தபடியே தொலைபேசி மூலமாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு ஒரு வாரத்திற்க்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.