சிறுவாடி கிராமத்தில் இரண்டு நாட்களாக பெய்த கனமழை!
1052 views
Subscribe விழுப்புரம் videosவிழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த சிறுவாடி கிராமத்தில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக திண்டிவனம் - மரக்காணம் பிரதான சாலையில் மழை நீர் தேங்கி நின்றது, மழை நீர் தேங்கி நின்றதன் காரணமாக சாலை அருகில் இருந்த வீடுகளிலும் கடைகளிலும் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் அவதிக்குள்ளாகினர், மேலும் காலை முதல் ஊராட்சி நிர்வாகமும், துறை சார்ந்த அதிகாரிகளும் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த சிறுவாடி கிராம பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது, இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பிரம்மதேசம் காவல் ஆய்வாளர் அன்பரசு தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மழை நீர் வடிவதற்கு நெடுஞ்சாலைத்துறையினரின் உதவியுடன் மழைநீர் வடிவதற்கு ஏற்படுகளை செய்தனர், இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து களைந்து சென்றனர் மேலும் சிறுவாடி கிராமத்தில் ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது இதே நிலை ஏற்படுவதாகவும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.