மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மூதாட்டி புகார்
1063 views
Subscribe விழுப்புரம் videosவிழுப்புரம் மாவட்டம் மைலம் அடுத்த கொரளூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன் மனைவி சரோஜா (வயது 65), இவருக்கு திருமணம் ஆகி முருகன் என்ற மகனும் தாமோதரன் என்ற மாற்றுத்திறனாளி மகனும் உள்ளனர், இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சரோஜாவின் கணவர் சின்னையன் உயிரிழந்துவிட்ட நிலையில் சின்னையனின் பெயரில் 6 ஏக்கர் 47 சென்ட் இடம் இருந்தது, அந்த சொத்துக்களை சாரோஜா பராமரித்து பாதுகாத்து வந்தார் வயதான காரணத்தினால் அவருடைய மூத்த மகன் முருகன் என்பவர், சொத்துக்களை தான் பராமரித்துக் கொள்வதாகவும், அவரையும் அவரது இளைய மகன் மாற்றுத்திறனாளியான தாமோதரனையும் கவனித்துக் கொள்வதாக கூறினார். எனவே அவரது சொத்துக்களை கடந்த 2020-ல் முருகன் தானசெட்டில்மெண்ட் செய்துகொண்டார். அதன் பிறகு அவர் மூதாட்டி சரோஜாவையும் அவரது இளைய மகன் தாமோதரனையும் கவனித்து பராமரிக்காமல் அவர்களை ஏமாற்றி அவரது சொத்துக்களில் 3 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்து விட்டார் மேலும் மீதமுள்ள 3.47 ஏக்கர் நிலத்தையும் விற்பனை செய்ய முயற்சி செய்கிறார், இதுதொடர்பாக கடந்த 13.7.2022 அன்று மயிலம் சார்பதிவாளரிடம் சொத்துக்கள் தொடர்பாக ஆவணப்பதிவு செய்யக்கூடாது என்று தடை மனுவும் அளித்துள்ளார். இதை பொருட்படுத்தாமல் விற்பனைக்கான வேலைகளை முருகன் செய்து வருவதால் சரோஜாவிற்கு பாத்தியப்பட்ட வாழ்வாதார சொத்தை ஆவணப்பதிவு செய்ய தடை விதிக்குமாறும், தானசெட்டில்மெண்ட் ஆவணத்தை ரத்து செய்து அவர்களுது சொத்தை மீட்டு அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார், மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் பழனி இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.