1.800 கிலோ போதை பொருள் கடத்திய முதியவர் கைது
1048 views
Subscribe விழுப்புரம் videosவிழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் மதுவிலக்கு சோதனை சாவடியில் புதுவையில் இருந்து சென்னை செல்லக்கூடிய அரசு பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதிலிருந்து ஒரு முதியவர் இறங்கி ஓடிள்ளார் அவரை பின்தொடர்ந்து மடக்கி பிடித்ததில் அந்த முதியவர் சென்னை பூந்தமல்லி சேர்ந்த ஹரிதுல்லா வயது 60 இவர் வைத்திருந்த பையில் 1.800 கிலோ போதை பொருள் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது, அதனையும் பறிமுதல் செய்து அவரையும் கைது செய்த கோட்டகுப்பம் போலீசார் அது என்ன வகையான போதை பொருள் என்று சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பயுள்ளனர். மேலும் அவரிடம் இருந்து விசாரணை செய்ததில் ஏற்கனவே அவர் சென்னையில் இருந்து புதுவைக்கு பேருந்தில் எடுத்துச் சென்றதாகவும் அந்த போதைப் பொருள் விற்பனையாகாததால் மீண்டும் சென்னைக்கு கொண்டு செல்வதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.