விஷத்தேனீ கொட்டியதில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
1055 views
Subscribe விழுப்புரம் videosவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் பாம்பூண்டி கிராமத்தில் ஏராளமான பெண்கள் 100-நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.அதன்படி இன்று காலை பாம்பூண்டு ஏரிக்கரையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வந்துள்ளனர், அப்போது புதர் பகுதியை தூய்மை செய்ய முயன்றுள்ளனர். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அங்கு இருந்த வெளியேறிய விஷ தேனீக்கள் அங்கு பணிபுரிந்து வந்த பெண்களை விரட்டி விரட்டி கொட்ட துவங்கியது.இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் வலி தாங்க முடியாமல் அலற துவங்கினர்.அங்கு பெண்கள் மயக்கம் அடைந்து விழுந்தனர். இதையடுத்து உடனடியாக அருகில் இருந்த பிறர் அனைவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் படுக்கை கிடைக்காமல் காயமடைந்தவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.மேலும் இது சம்பந்தமாக தகவல் அறிந்த மயலம் ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.