அமைச்சர் பொன்முடியின் சர்ச்சையை ஏற்படுத்திய பேச்சுவிழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.எடையார் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் உதவி மின் பொறியாளர் அலுவலக கட்டிடம், ஏமாப்பூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர் பொன்முடி:-எடையார் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்ட பணிகள் குறித்து பட்டியலிட்டு பேசிக்கொண்டு இருந்தார் அப்போது கூட்டத்தில் இருந்த மூதாட்டி ஒருவர் 100 நாள் வேலையில் பணம் பிடித்தம் செய்வதாக கூறினார். இதனையடுத்து அமைச்சர் பொன்முடி 100 நாள் வேலையில் பணம் பிடித்தம் செய்ய மாட்டார்கள் எனவும், அப்படி யாரேனும் செய்திருந்தால் என்னிடம் கூறுங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் எனக் கூறினார். மேலும் வாங்குன காச இல்லன்னு சொல்றதுதான் நம்முடைய பழக்கம் அது ஒன்னும் இல்ல விடுங்க எனக் கூறினார். இதனை அடுத்து இலவச பேருந்து போறீங்களா இல்லையா எனவும் கேள்வி எழுப்பினர், இதனால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பழனி, கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜயன்,விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், உதவி மின் பொறியாளர் பாக்யராஜ், ஊராட்சி மன்ற தலைவர்ள் ஏமப்பூர் தேவி செந்தில், எடையார் சுந்தரமூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.