மரக்காணம் திரவுபதி அம்மன் கோவிலை இந்து அறநிலைத்துறை கைப்பற்றியது: பொதுமக்கள் எதிர்ப்பு
1045 views
Subscribe விழுப்புரம் videosவிழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தர்மாபுரி வீதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயில் இந்த கோயில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும் இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் 21 நாட்கள் பொதுமக்கள் சார்பில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம் கோயிலுக்கான வருவாய் ஏதும் இல்லை இந்நிலையில் இந்த கோயிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் என கடந்த மாதம் துறை சார்ந்த அதிகாரிகள் கூறி உள்ளனர், இதற்கு இப்பகுதி திருவிழா நடத்தும் பொதுமக்கள் சார்பில் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பு தெரிவித்தனர், அப்பொழுது அதிகாரிகள் இந்த கோயிலை அறநிலையதுறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என ஒரு சிலர் தனிநபர் நீதிமன்றம் வரையில் வழக்கு தொடர்ந்து உள்ளனர், இதன் காரணமாகத்தான் நாங்கள் கோயிலை எங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க ஏற்பாடு செய்கிறோம் என்று கூறியுள்ளனர், இதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் கடந்த 8-ஆம் தேதி இந்து அறநிலைத்துறை அதிகாரிகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டமும் கடையடைப்பும் நடத்தினர், இதனைத் தொடர்ந்து வழக்கம் போல் இந்த ஆண்டு திருவிழாவை நடத்த கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொடியேற்றமும் நடைபெற்றது, இதனைப் பார்த்த இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் விழுப்புரம் மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவிலை அறநிலைய துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததற்கான அறிவிப்பு நோட்டீசை கோவிலில் ஒட்ட வந்தனர், இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், ஆனால் பொது மக்களின் எதிர்ப்பையும் மீதி அறிவிப்பு நோட்டீசை கோயிலில் ஒட்டினர் இதன் காரணமாக மரக்காணம் பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.