மரக்காணம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது!
1051 views
Subscribe விழுப்புரம் videosவிழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சி தர்மபுரி வீதியில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயில் உள்ளது இந்த கோயிலுக்கு மரக்காணம் பகுதியில் உள்ள பொதுமக்கள் சார்பில் தங்களது சொந்த நிதியின் மூலம் 21 நாட்களுக்கு திருவிழா நடத்துவது வழக்கம் இதுபோல் கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி பொதுமக்கள் பாரம்பரியம் மாறாமல் திருவிழா நடத்தி வருகின்றனர் இந்நிலையில் இந்த வருட 21 நாள் திருவிழா கடந்த மாதம் 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, தொடர்ந்து இருவது நாட்களும் பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றது, இந்த நிலையில் கடைசி நாளான இன்று தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது, இதில் 200-க்கும் கும்மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர், மேலும் இந்த தீ மிதி திருவிழாவில் புதுச்சேரி மற்றும் மரக்காணம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர், விழாவிற்கான ஏற்பாடுகளை உபயதாரகள் மற்றும் மரக்காணம் பொது மக்கள் செய்து இருந்தனர், மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு மரக்காணம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு இருந்தனர்.