மரக்காணம் கள்ள சாராய விவகாரம்...அமைச்சர் செய்த செயல்
1259 views
Subscribe விழுப்புரம் videosவிழுப்புரம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரை ஓரமுள்ள வம்பாமேடு என்ற இடத்தில் விற்ற கள்ள சாராயத்தை குடித்துவிட்டு கடந்த மாதம் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், இதில் 52 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர், இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபர்களுக்கு ரூபாய்10 லட்சமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார், இந்த அறிவிப்பினை தொடர்ந்து உயிரி இழந்தநபர்களின் குடும்பத்தாரிடம் ரூபாய் பத்து லட்சத்தை அமைச்சர் மஸ்தான் மற்றும் பொன்முடி ஆகியோர் நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்து காசோலை வழங்கினர், இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பிய 52 நபர்களுக்கு தலா 50 ஆயிரத்துக்கான காசோலையை சம்பந்தப்பட்ட நபர்களிடம் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மரக்காணம் வட்டசியர் அலுவலகத்தில் வழங்கினார், காசோலை வழங்கும் போது இனிமேல் சாராயம் குடிக்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்க வைத்து காசோலை வழங்கினார் , இதில் விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மரக்காணம் வட்டாட்சியர் பாலமுருகன், மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன், துணை சேர்மன் பழனி, துணை செயலாளர் ரவிக்குமார், மத்திய ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் ஏழுமலை, மாவட்ட கவுன்சிலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.