தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்திய தோழிகள்விழுப்புரத்தில் இணைபிரியா தோழிகளின் ஒரே மாதிரியான மதிப்பெண் எடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்திய மாணவிகள்.விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 9366 மாணவர்கள்,10,186 மாணவிகள் என மொத்தம் 19,552 பேர் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளன மாவட்டத்தில் மொத்த தேர்ச்சி சதவீதம் 90,66 ஆகும்.இந்த நிலையில் விழுப்புரம் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சிவரஞ்சனி மற்றும் இவரது தோழி விக்டோரியா இருவரும் தொடர்ந்து 4 ஆண்டுகளாக நெருங்கிய தோழிகளாக இருந்து வருகின்றனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன் இருவரும் பிளஸ் டூ பேஷன் டெக்னாலஜி பாடப்பிரிவை ஒன்றாக எடுத்து சேர்ந்து படித்து வந்த நிலையில் இருவரும் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில் இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. சிவரஞ்சனி மற்றும் விக்டோரியா ஆகிய இருவரும் பிளஸ் டூ தேர்வில் ஒரே மாதிரி 322 மதிப்பெண் பெற்று உள்ளதை கண்டு ஆச்சரியத்துடன் பார்த்தனர்.என்னதான் இருந்தாலும் பலர் தோழிகள் நெருங்கி இருந்தாலும் ஒரே மாதிரி மதிப்பெண் எடுப்பது என்பது அரிது ஆனால் சிவரஞ்சனி மற்றும் விக்டோரியா ஆகிய இருவரும் ஒரே மதிப்பெண் எடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.