பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது!
1025 views
Subscribe விழுப்புரம் videosவிழுப்புரம் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் மரக்காணம் அடுத்த முன்னூர் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் ஏ.டி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது, இந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜகவின் மாநில துணைத்தலைவர் டால்பின் ஸ்ரீதர், மருத்துவ பிரிவு மாநில தலைவர் பிரேம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர், இந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகளில் செய்துள்ள சாதனைகளுக்கு அவருக்கு பாராட்டி நன்றி கூறி தீர்மானம் மற்றும் திண்டிவனம் நகரத்தில் புதிய பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடித்து மக்கள் சேவைக்கு கொண்டு வர வேண்டும், மாவட்டத்தில் பல்வேறு முக்கிய மக்கள் கூடும் இடங்களில் பொதுக்கழிப்பிடம் அமைக்க வேண்டும் எனவும் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி-தேவதானம் பேட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் எனவும் கள்ளச்சாராய விற்பனையாளர்கள் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, இந்த விழுப்புரம் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பாஜகவின் மாவட்ட மாநில நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.